×

கிணற்றில் தவறி விழுந்த வாலிபருக்கு கை முறிவு

 

சின்னசேலம், மே 5: 2மீன் பிடிக்க கிணற்றில் இறங்கிய வாலிபர் தவறி விழுந்ததில் கை எலும்பு முறிந்தது. சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(34). இவர் பொறியியல் பட்டதாரி. தற்போது ஐடி கம்பெனியில் வேலை செய்து வருவதாக தெரிகிறது. இவரது கிணற்றில் தண்ணீர் வடிந்து விட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி மீன் பிடித்துள்ளார். அதேபோல நேற்று மதியம் ராஜசேகர் அவரது கிணற்றில் கயிறு கட்டி கயிற்றின் மூலம் இறங்கி மீன் பிடித்துள்ளார். பின்னர் கயிற்றின் மூலம் மேலேறிய போது தவறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவருடைய கை எலும்பு முறிந்து விட்டதாக தெரிகிறது. மேலும் அவர் மயக்கம் அடைந்து விட்டதால் அவரால் மேலே ஏற முடியவில்லை. இது குறித்து அங்கிருந்தவர்கள் சின்னசேலம் தீயணைப்பு துறைக்கும், ஆம்புலன்சிற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சின்னசேலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையில் ஆனந்தகுமார் மற்றும் வீரர்கள் சென்று கிணற்றில் மயங்கிய நிலையில் இருந்த ராஜசேகரை மீட்டு, மேலே கொண்டு வந்து முதலுதவி அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த வாலிபருக்கு கை முறிவு appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Rajasekhar ,Moongilbadi ,
× RELATED வித்தியாசமான தகவல்கள்